Skip to main content

"நாட்டின் நிஜ ஹீரோக்களை கண்டு பாஜக அஞ்சுகிறது" - மக்களவையில் சரவெடியாய் வெடித்த மஹுவா மொய்த்ரா

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

mahua moitra

 

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மாதம் 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் ராகுல் காந்தி ஆற்றிய உரை, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் உரையாற்றினார்.

 

அவர் தனது உரையில் வேளாண் சட்ட போராட்டம், பெகாசஸ் என பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக தாக்கினார். மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆற்றிய உரை வருமாறு; (இந்திய) குடியரசின் எஜமானர்கள், எவ்வாறு நிகழ்காலத்தில் அவநம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதை பெகாசஸ் விவகாரம் துல்லியமாக விளக்கியுள்ளது. சொந்த குடிமக்களை உளவு பார்ப்பதற்கு மக்களின் வரிப்பணத்தில் ஒரு தொழில்நுட்பத்தை வாங்கியது என அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. (உங்களை பொறுத்தவரை) நியூயார்க் டைம்ஸ் பொய் சொல்கிறது, தி வயர் பொய் சொல்கிறது, அம்னெஸ்டி பொய் சொல்கிறது, பிரெஞ்சு அரசாங்கம் பொய் சொல்கிறது, ஜெர்மன் அரசாங்கம் பொய் சொல்கிறது, அமெரிக்க அரசாங்கம் பொய் சொல்கிறது. என்.எஸ்.ஓ மீது வழக்குத் தொடுத்த வாட்ஸ்அப் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பொய் சொல்கின்றன. இந்த அரசாங்கம் மட்டுமே பெகாசஸ் பற்றி உண்மையை கூறி தனித்துவமாக திகழ்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தைக் கூட அரசாங்கம் தவறாக வழிநடத்தியுள்ளது.

 

ஜனாதிபதியின் உரை பலமுறை நேதாஜியை குறிப்பிடுகிறது. இந்திய அரசு அனைத்து மதங்கள் மீதும் நடுநிலையையும் பாரப்பட்சமற்ற அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியது அதே நேதாஜிதான் என்பதை இந்தக் குடியரசுக்கு நினைவுபடுத்துகிறேன். முஸ்லீம் இனப்படுகொலைக்கான இரத்தத்தை உறைய வைக்கும் அறைகூவலை விடுத்த ஹரித்வார் தரம் சன்சாத் போன்ற ஒன்றை நேதாஜி அங்கீகரித்திருப்பாரா?. இந்த அரசாங்கம் வரலாற்றை மாற்ற விரும்புகிறது. அரசு எதிர்காலத்தைப் பற்றி அஞ்சுகிறது. அவர்கள் நிகழ்காலத்தின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஜனாதிபதி தனது உரையின் ஆரம்பத்தில், இந்தியாவிற்கு உரிமைகளைப் பெற்றுத்தந்த சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி பேசுகிறார். ஆனால் இதுவெறும் உதட்டளவில் மட்டுமே உள்ளது. இந்த அரசாங்கம் மிகவும் பாதுகாப்பற்றதாக தன்னை உணர்கிறது. அது சுப்பிரமணிய பாரதி, வி.ஆர்.பிள்ளை, ஸ்ரீ நாராயண குரு மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியாரை பற்றிய அலங்கார ஊர்தியை அனுமதிக்காத விஷயத்திலேயே பிரதிபலிக்கிறது. அரசாங்கம் சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மீள்உருவாக்கம் செய்ய முயல்கிறது. ஆனால் நம் நாட்டின் உண்மையான கதாநாயர்களை கண்டு அஞ்சுகிறது.

 

நீங்கள் (அரசாங்கம்) எங்கள் வீட்டிற்குள் நுழைய விரும்புகிறீர்கள். நாங்கள் என்ன சாப்பிடுகிறோம், என்ன உடுத்துகிறோம் என்பதில் தலையிட விரும்புகிறீர்கள். தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சோதனை நடத்த அரசு அமைப்புகளை பயன்படுத்த முடியாமல் போகலாம் என்ற எதிர்காலத்தை குறித்த பயத்தால் சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவி காலத்தை நீங்கள் நீட்டிக்கீறிர்கள். மாநிலத்தில் உள்ள அதிகாரிகளை மத்திய அரசால் கொடுமைப்படுத்த முடியாத எதிர்காலத்தை கண்டு நீங்கள் பயப்படுகிறீர்கள், எனவே நீங்கள் ஐஏஎஸ் கேடர் விதியை திருத்துகிறீர்கள். நமது குடியரசின் ஆன்மா மீது அவநம்பிக்கை கொண்டுள்ளீர்கள். அதனால்தான் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதாரை இணைக்க விரும்புகிறீர்கள். உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமையை இழக்க செய்யும் சாத்தியங்களை உருவாக்குகிறீர்கள் .உத்தரப்பிரதேசத்தில் 70 இடங்களை இழக்க நேரிடும் என்ற அச்சத்தால் வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்பட்டது. ஜாட்கள் மீதும் சீக்கியர்கள் மீதும் உங்களுக்கு ஆதரவாக நிற்கும் அனைவர் மீதும் நீங்கள் அவநம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள். ஆனால் தேர்தல் நெருங்கியுள்ளதால் வெட்கமின்றி (சீக்கியர்களின்) தலைப்பாகை அணிகிறீர்கள்.  80 சதவீதத்துக்கும் 20 சதவீதத்துக்கும் இடையே அரசு தொடங்கிய போர், நமது புனித குடியரசை 100 சதவீதம் அழிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

 

இவ்வாறு மஹுவா மொய்த்ரா ஆவேசமாக உரையாற்றினார். மஹுவா மொய்த்ரா உரையின்போது, அப்போது சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த பாஜக எம்பி ரமா தேவி 5 முறை குறுக்கிட்டார். மேலும் ஆத்திரப்படாமல் பேசுமாறும் மஹுவா மொய்த்ராவை கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு மஹுவா மொய்த்ரா, தனது கோபம் உள்ளிருந்து வருவதாக கூறி பேச்சை தொடர்ந்தார். இதன்பின்னர் மஹுவா மொய்த்ரா பேசிக்கொண்டிருக்கும்போதே அடுத்த எம்.பி-யை ரமா தேவி பேச அழைத்தார். இதற்கு மஹுவா மொய்த்ரா, கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மேலும் மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களவை சபாநாயகர் எனக்கு குறைந்தபட்சம் 13 நிமிடங்களை ஒதுக்கினார், அவரது அறைக்கு சென்று இதுதொடர்பாக கேட்டபோது, அவர், நான் (சபாநாயகர்) இருக்கையில் இல்லை எனவே குற்றம் சொல்ல முடியாது என்றார். மேலும் அவரை தொண்டி துருவியபோது, 13 நிமிடங்கள் உனக்கு ஒதுக்கியதே பெருந்தன்மை என கூறினார். இது நம்பமுடியாது" என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் தனது மற்றொரு ட்விட்டில், "நான் கோபமாக பேச வேண்டுமா, அன்பாக பேச வேண்டுமா என எனது மதிப்புமிக்க நேரத்தை எடுத்துக்கொண்டு, குறுக்கீட்டு பாடம் நடத்த சபாநாயர் யார்? அது உங்கள் வேலை இல்லை மேடம். நீங்கள் விதிகளின் கீழ் மட்டுமே என்னை திருத்த முடியும். நீங்கள் மக்களவையின் நீதி நெறி ஆசிரியர் அல்ல" எனவும்  பாஜக எம்பி ரமா தேவியை விமர்சித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பச்சை துரோகம்” - விஜய் சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vijay sethupathi election video

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் அன்றே நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தி.மு.க, காங்கிரஸ், இடது சாரிகள், வி.சி.க, உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனி கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க தேசிய ஜனநாயக கூடணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதையொட்டி தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விஜய் சேதுபதி வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி பேசியதாவது, “நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தா நமக்கென்ன... இல்லை யார் காசு கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம்... ஒட்டு போட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை... இது போன்ற மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.   

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு புடிச்சவங்க புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு. 

நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலைத் பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு. இதுக்கு முன்னாடி அவுங்க என்ன செஞ்சிருக்காங்க, என்ன சொல்றாங்க என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க. இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்க” என்றார்.