Skip to main content

மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பல்வேறு குழப்பங்களுக்கு பிறகு, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது.

maharashtra state ministers has approved the allocation of portfolios


கடந்த நவம்பர் மாதம் 28- ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன்பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 30- ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

maharashtra state ministers has approved the allocation of portfolio




இதில் துணை முதல்வராக அஜித்பவார் மீண்டும் பதவியேற்றார். விதான் பவன் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. 

maharashtra state ministers has approved the allocation of portfolios


இந்நிலையில் இன்று (05.01.2020) மகாராஷ்டிர மாநில அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுநிர்வாகம், தொழில் நுட்பம், சட்டம் உள்ளிட்ட துறைகள் முதல்வர் உத்தவ் தாக்கரே வசம் இருக்கும். முதல்வர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் அஜித் பாவருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறையும், அமைச்சர் அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறையும், அமைச்சர் ஜெயந்த் பாட்டீலுக்கு நீர்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர் சாஜன்புஜ்பாலுக்கு உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம், அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு சிறுபான்மையினர் நலத்துறை, அமைச்சர் பாலாசாகேப்  தரோட்டுக்கு வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"தகுதி நீக்க மனுக்களில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது"- உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு! 

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

"Speaker should not take any decision on disqualification petitions"- Supreme Court judges order!

 

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான தரப்புக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. 

 

சிவசேனாவின் 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேவேளையில் சிவசேனாவின் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் தான் உள்ளனர் என்றும், ஆகவே உத்தவ் தாக்கரே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ஏக்நாத் ஷிண்டே தரப்பு வழக்கை எற்றுக் கொண்டால், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசையும் கவிழ்க்க முடியும் என்பதாகிவிடாதா என வினவினார். அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் தடை இருந்தும், மாநில அரசுகளை கலைக்க முடியும் எனில் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் கபில்சிபல் வாதிட்டார். 

 

இரு தரப்பு மனுக்களில் பல பிரச்சனைகள் இருப்பதால், அவற்றை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைச் செய்ய வேண்டி இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதுவரை, சட்டப்பேரவையின் சபாநாயகர் தற்போதைய நிலையைப் பேணுவார் என்றும், தகுதி நீக்க மனுக்களில் அவர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அனைத்து ஆவணங்களையும் பத்திரமாக வைக்குமாறு மகாராஷ்டிரா சட்டப்பேரவைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்குகள் மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

 

Next Story

உத்தவ் தாக்கரே எடுத்த முடிவால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி

Published on 12/07/2022 | Edited on 12/07/2022

 

Opposition parties shocked by Uddhav Thackeray's decision

 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா கட்சி முடிவெடுத்துள்ளது.

 

ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இரு வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களை தொடர்ச்சியாகச் சந்தித்து ஆதரவு கோரிவருகின்றனர். எதிர்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக சிவசேனா வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய திருப்பமாக திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முடிவெடுத்துள்ளது. சிவசேனா எடுத்துள்ள இந்த முடிவானது மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணியின் நிலைப்பாட்டிற்கு எதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் இந்த திடீர் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.