Skip to main content

மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை நாளை (27.11.2019) காலை கூடுகிறது!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், 22- ஆம் தேதி இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.
 

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார். இதனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் மனு தாக்கல் செய்தன. இதில் இன்று (26.11.2019) பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

 Maharashtra State Legislative Assembly convenes tomorrow morning


அதன்படி மஹாராஷ்டிராவில் நாளை (27-11-19) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 162 ஆதரவு எம்.எல்.ஏ க்களுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா நேற்று (25.11.2019) பேரணி நடத்திய நிலையில், நாளையே பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 

பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்த்த மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை நேரில் சந்தித்து வழங்கினார் பட்னாவிஸ். 

 Maharashtra State Legislative Assembly convenes tomorrow morning

அதனை தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்பார்  என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அம்மாநில சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ காளிதாஸ் கொலம்ப்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட காளிதாஸுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. 

 Maharashtra State Legislative Assembly convenes tomorrow morning


மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூட்டத்தை நாளை (27.11.2019) காலை 08.00 மணிக்கு கூட்டுவதற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அப்போது புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

கவிழும் நிலையில் அரசு?- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்த துணை சபாநாயகர்! 

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Government in a state of collapse? - Deputy Speaker who shocked the legislators!

 

சிவசேனா கட்சியைச் சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

 

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ள ஏக்நாத் ஷிண்டே, அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள தனியார் நட்சத்திர சொகுசு விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் முகாமிட்டுள்ளார். அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உத்தவ் தாக்கரேவின் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், சிவசேனா கட்சியின் செயற்குழு கூட்டம் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கவுகாத்தியில் தங்கியுள்ள 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

 

அவர்கள் அனைவரும் வரும் ஜுன் 27- ஆம் தேதி அன்று திங்கள்கிழமைக்குள் தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

Next Story

கவிழும் நிலையில் மகாராஷ்டிரா அரசு?- சட்டமன்ற உறுப்பினர்களின் முடிவால் சிவசேனா அதிர்ச்சி! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Maharashtra govt on the verge of collapse? - Shiv Sena shocked by legislators' decision!

 

மகாராஷ்டிரா மாநில அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், அம்மாநில சட்டப்பேரவைக் கலைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 

 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக் கலைக்கப்படும் சூழல் நெருங்கி வருவதாக சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு 55 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியாளராக மாறியுள்ளார். இதனால் சிவசேனா கட்சியின் 33 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஏக்நாத் ஷிண்டே அசாம் மாநிலம், கவுகாத்தியில் சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். தனக்கு 40 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

 

இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில், மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

அதிருப்தியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைச் சமாதானப்படுத்தும் சிவசேனா கட்சியின் முயற்சியில் பலன் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பா.ஜ.க. ஆட்சி அமைவதைத் தடுப்பதற்காகச் சட்டப்பேரவையைக் கலைக்க சிவசேனா திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.