ADVERTISEMENT

வேகமாக குறைந்து வரும் கரோனா தொற்று... நிம்மதி பெருமூச்சு விடும் மகாராஷ்ட்ரா!

10:22 PM Jun 21, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

இந்தியாவில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, கர்நாடகா,கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மகாராஷ்டிராவில் மட்டும் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வந்தது. நேற்று 7156 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 6,270 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,33,326 ஆக அதிகரித்துள்ளது. 1,24,398 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும் இன்று 94 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 1,18,313 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 13,758 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 40 நாட்களுக்கு முன்பு வரை தினசரி கரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்த நிலையில் தற்போது தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது அம்மாநில மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT