Advertisment

வெகு வேகமாக குறைந்து வரும் கரோனா தொற்று... நிம்மதியில் மகாராஷ்ட்ரா!

f

இந்தியாவில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மகாராஷ்ட்ராவில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகிறது. நேற்று அம்மாநிலத்தில்18,600பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 15,077 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,05,326 ஆக அதிகரித்துள்ளது. 2,53,901 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும் இன்று 184 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 95,028பேர் கரோனா தொற்றால் மொத்தமாக இதுவரை மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 33,000 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 53,56,397ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe