ghj

Advertisment

இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மஹாராஷ்ட்ராவில்28 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக இங்கு கரோனா பாதிப்பு அதிகப்படியாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் (31.03.2021) 35,328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றுமேலும் 43,183 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,13,833 ஆக அதிகரித்துள்ளது.

3,42,901 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும் 249 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 54,481 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 22,019 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 23,97,056 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அம்மாநில அரசு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.