ADVERTISEMENT

40 ஆயிரத்தை தாண்டிய தொற்று... கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகும் மாநிலம்!

08:02 AM Mar 29, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மகாராஷ்ட்ராவில் 27 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மகாராஷ்ட்ராவில் கரோனா பாதிப்பு அதிகப்படியாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் (27.03.2021) 35,328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 40,414 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,13,833 ஆக அதிகரித்துள்ளது. 3,25,901 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும் 108 பேர் மரணமடைந்துள்ள நிலையில், மொத்தம் 54,181 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 18,019 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 23,34,056 ஆக உயர்ந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT