Skip to main content

வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய குரங்கு மீட்பு... வைரலாகும் வீடியோ!

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

வட கிழக்கு மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் கனமழையால் பீகார், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த மாநிலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது.

 

 

 

RED ALERT IN MAHARASHTRA

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழையால் மும்பை, தானே, கல்யாண் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. மும்பை விமான நிலையம் மற்றும் ரயில்வே நிலையங்கள் நீரில் முழ்கியுள்ளதால் போக்குவரத்து சேவையை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த மாநிலத்தில் இன்று அதிதீவிர மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் "ரெட் அலெர்ட் " எச்சரிக்கை விடுத்துள்ளதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை ஹெலிகாப்டர் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

 

 

RED ALERT IN MAHARASHTRA

 

 

 

 

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள சம்தோலி பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 வயதுடைய ராணி என்ற குரங்கு ஒன்று வெள்ளத்தில் சிக்கி மூழ்கிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட மீட்புப் படையைச் சேர்ந்த வீரர் விரைந்து சென்று குரங்கைக் காப்பாறினார். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள குரங்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாதம் ஊதியம் வழங்க மஹாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் முடிவு!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அசாம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கோடி மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 160- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

 

 

MAHARASHTRA FLOOD PEOPLES AFFECTED STATE MINISTERS AND CM DONATE ONE MONTH SALARY

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வர்த்தக நகரமான மும்பை முடங்கியது. அதே போல் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களான கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, சோலாப்பூரில் பலத்த மழை பெய்தது. அந்த மாநிலத்தில் உள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்கண்ட 5 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறியது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

MAHARASHTRA FLOOD PEOPLES AFFECTED STATE MINISTERS AND CM DONATE ONE MONTH SALARY


மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மழை வெள்ள நிவாரண நிதிக்கு தங்களது ஒரு மாத ஊதியத்தினை வழங்குவது என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மாநில அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டனர். 

 

MAHARASHTRA FLOOD PEOPLES AFFECTED STATE MINISTERS AND CM DONATE ONE MONTH SALARY

 

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதல்வர் தேவேந்திர பட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலும், சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் வகையில் ரூபாய் 6,813 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.