Advertisment

மராட்டியத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா... ஒரே நாளில் 8,369 கரோனா தொற்று!

ghj

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. நேற்று 8,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 8,369 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,27,031 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 246 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். 1,32,236 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். 1,82,217 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 11,854 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர்.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe