ADVERTISEMENT

மராட்டியத்தை சுழன்றடிக்கும் கரோனா! ஒரே நாளில் 125 பேர் பலி!!

09:31 PM Jul 02, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ADVERTISEMENT

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. இன்று 6,330 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 125 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.8 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. 8000 பேர் இன்று மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT