Skip to main content

30 ஆயிரம் ரூபாய் சம்பளம்; கோடியில் புரண்ட பெண் என்ஜினீயர்; போலீசார் அதிர்ச்சி

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

madhya pradesh contract engineer hema meena issue

 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் பெண் பொறியாளர் ஒருவர் வீட்டில் நடத்திய சோதனையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களால் லோக் ஆயுக்தா போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

மத்தியப் பிரதேச காவல்துறையின் வீட்டு வசதி வாரியத்தில் ஒப்பந்த உதவி பொறியாளராக 2011 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர் ஹேமா மீனா (வயது 34). இவரின் மாதச் சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் ஆகும். இவர் மீது கடந்த 2020 ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த புகார் மீது கடந்த வியாழக்கிழமை அவருக்கு சொந்தமான இடங்களில் மத்தியப் பிரதேச லோக் ஆயுக்தா போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

 

போபால் அருகே உள்ள பில்கிரியா என்ற இடத்தில் தனது தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 20 ஆயிரம் சதுர அடி இடத்தில் கட்டப்பட்ட 40 அறைகள் கொண்ட பங்களாவில் ஹேமா மீனா வசித்து வருகிறார். இதன் மதிப்பு சுமார் 1 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த பங்களாவில் லோக் ஆயுக்தா போலீசார் மேற்கொண்ட சோதனையில், அந்த பங்களா முழுவதும் ஆடம்பர பொருட்கள் நிறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது அறையில் இருந்து 30 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி ஒன்று மீட்கப்பட்டது. இது தவிர பங்களாவில் இருந்து இரண்டு லாரிகள் மற்றும் பல்வேறு சொகுசு வாகனங்களும் மீட்கப்பட்டன.

 

madhya pradesh contract engineer hema meena issue

 

மேலும் ஹேமா மீனாவின் பண்ணை வீட்டில் லோக் ஆயுக்தா போலீசார் மேற்கொண்ட சோதனையில், அங்கு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள அரசு உபகரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மதிப்புள்ள விவசாய உபகரணங்கள், விலை உயர்ந்த மதுபாட்டில்கள், சிகரெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர அவரது பண்ணை வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பிட்புல், டாபர்மேன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இன நாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது மட்டுமின்றி பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 60 மாடுகளும் அங்கிருந்து மீட்கப்பட்டன. இந்த சோதனையில் அவரது வீட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ரொட்டி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இயந்திரமானது நாய்களுக்கு உணவளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இது மட்டுமின்றி இவரது பண்ணை வீட்டின் அருகே இவருக்கு சொந்தமான பால் பண்ணை ஒன்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் இந்த ஆடம்பர வாழ்க்கை நிலையைக் கண்டு மத்தியப் பிரதேச லோக் ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சோதனையானது மத்தியப் பிரதேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.