Advertisment

"நாம் மேலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

maankibaat pm narendra modi speech

மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பொது முடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்றுநோக்கியுள்ளது. மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தால்தான் வைரஸில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். கரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். இந்திய மக்களின் சேவை மனப்பான்மை காரணமாகவே இந்த போரில் வலுவுடன் போராட முடிகிறது. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே உள்ளது. மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், போலீசார், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்கள்.

Advertisment

மதுரையில் சலூன் நடத்தும் மோகன் தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை ஏழைகளுக்கு தந்தார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு பாராட்டுக்கள். இச்சூழலில் கல்வி கற்பித்தலில் ஆசிரியர்கள், மாணவர்கள் புதிய தலைமுறையை கண்டுபிடித்தது மகிழ்ச்சி தருகிறது. ஏழைகள் மற்றும் தொழிலாளர்களே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனையைச் சந்திக்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா தனது சுய சக்தியில் செயல்படும்போது பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படும். யோகா, ஆயுர்வேதத்தை கரோனாவுக்கு எதிராக எவ்வாறு பயன்படுத்தலாம் என உலகத்தலைவர்கள் என்னிடம் கேட்டனர். யோகா, ஆயுர்வேதத்தை மக்கள் தினசரி செய்ய தொடங்கியதைப் பார்க்க முடிகிறது.

Advertisment

யோகாசனம் மூலம் சுவாச பயிற்சி மேற்கொள்ளும் காணொளி தயாரிப்பு போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம். யோகாசனம் செய்யும் வீடியோவை போட்டி தளத்தில் பதிவிடலாம். புதுச்சேரியைச் சேர்ந்த ஜீவா என்பவர் இருதய பிரச்சனையில் இருந்து குணமடைய ஆயுஷ்மான் பாரத் திட்டமே காரணம். சிகிச்சைக்கான பண வசதி ஜீவாவிடம் இல்லாததால் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பலன் கிடைத்தது. வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை காக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெட்டுக்கிளி பிரச்சனை விவசாயிகளை பாதிக்காமல் காக்க புதிய உத்திகள், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

நீர்நிலைகளை பாதுகாத்து சுத்தமாக வைத்திருப்பதை பொதுமக்கள் உறுதிப்படுத்த வேண்டும். பழமையான முறைகள் மூலம் எளிமையாக மழைநீர் சேமிப்பு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் மரங்களை நடவேண்டும்; கோடைகாலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும்." இவ்வாறு பிரதமர் பேசினார்.

lockdown coronavirus Speech PM NARENDRA MODI maankibaat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe