Advertisment

லக்னோவில் காங்கிரஸ் பேரணி தொடங்கப்பட்டது...

rahul- priya

கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தனது தங்கையான பிரியங்காவுக்கு உபி கிழக்கு பகுதி பொதுச் செயலாளர் பதவியை கொடுத்து பலருக்கு அதிர்ச்சி அளித்தார். பலர் இதனை வரவேற்றனர். இந்நிலையில், பிரியங்கா காந்தி கட்சி பதவியேற்று முதல் அரசியல் பேரணியை லக்னோவில் தற்போது தொடங்கப்பட்டது. இந்த பேரணியில் ராகுல் காந்தியும் கலந்துகொள்கிறார்.

Advertisment

முன்னதாக, தனது பயணம் தொடர்பாக ஆடியோ செய்தியை வெளியிட்டுள்ள பிரியங்கா காந்தி, இளைஞர்களுக்கும் சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். வாருங்கள் புதிய அரசியலையும் புது யுகத்தையும் கட்டமைப்போம் என்று அதில் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் காலை 11 மணி தொண்டர்களை சந்திக்கும் பிரியங்கா, பிப்ரவரி 14ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து 42 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளையும் சந்திப்பார் என்று தெரிகிறது.

Advertisment

priyanka gandhi rahul ganthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe