Advertisment

சாலையின் குறுக்காக வந்த லாரி... நொடி பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்!

வேகமாக வந்த லாரிகளுக்கு இடையில் சிக்க இருக்க வேண்டிய நபர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள போத்திரெட்டி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த லாரியின் மீது பக்கவாட்டில் வந்துகொண்டிருந்த மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாலையில் சென்ற ரஜிம் என்பவர் மீது இரண்டு வாகனங்களும் மோதுவது பேன்று சென்றது.

Advertisment

ஆனால் இரண்டு லாரிகளும் சத்தத்துடன் மோதியதால் அந்த அதிர்ச்சியில் இருந்த அவர் சாலையின் ஓரத்திற்கு ஓடியுள்ளார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அனைத்து சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. மனதை உறைய வைக்கும் இந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe