Advertisment

பிரதமரை பேசவிடாமல் அமளி; மக்களவை ஒத்திவைப்பு!

narendra modi

Advertisment

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனையடுத்து இடைத்தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களைப் பிரதமர் மோடி, அறிமுகம் செய்து வைக்க முயன்றபோது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மக்களவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்க முயலுகையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். இதற்கிடையே மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் மறைந்த மாநிலங்களவை எம்.பிக்களுக்கும், ஆளுமைக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாநிலங்களவை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தொடங்கியது.

lok sabha Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe