Skip to main content

2019 ல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி...

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

erags

 

2019 மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்' என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற இரண்டே நாட்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெய்ப்பூரில் பிரமாண்ட விவசாயிகள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'ராஜஸ்தான் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அனைத்து மாநில விவசாயிகளும் நிறைய கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். நடந்து முடிந்த 5 மாநிலங்களின் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வோம் என அறிவித்தோம். ஆனால் ஆட்சிக்கு வந்த 2 நாட்களிளேயே விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தோம். இதேபோல் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்