Skip to main content

பிரதமரின் அழைப்பை ஏற்று வீடுகளில் கொடி ஏற்றுவோம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

l.murugan

 

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீடியோ  பதிவை வெளியிட்டுள்ளார். 


 மனதின் குரல்  (மான்கீ பாத்) என்ற நிகழ்ச்சியில்  உரையாற்றி இருந்த பிரதமர் மோடி "ஆகஸ்ட் 13 முதல் 15 வரை இந்திய மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்" என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

 

அதில் பேசிய அவர் "பிரதமர் மோடிஜியின் அழைப்பை ஏற்று அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில்  சுதந்திரத்திற்காகப்  பாடுபட்ட தியாகிகளின் நினைவை போற்றும் விதமாகவும் தேசியக் கொடியின் மகிமையை போற்றும் விதமாகவும் நாம் அனைவரும் ஆகஸ்ட்  13 முதல் 15ம் தேதி வரை  தேசியக் கொடியை வீடுகளில்  ஏற்றி பாரத தேசத்தின் மகிமையை உலகிற்கு எடுத்துக் காட்டுவோம்" எனக் கூறியுள்ளார் . மேலும் அவர் திருப்பூர் குமரன் மற்றும் கட்டபொம்மன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களையும் மேற்கோள் காட்டி பேசியுள்ளார். தமிழக அரசியல் கட்சித்  தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் பிரதமரின் அழைப்பை ஏற்று சமூக வலைத்தளங்களில் தங்களது சுயவிவர படமாக இந்தியத் தேசியக்  கொடியை மாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.