Skip to main content

உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியல்... டிசிஎஸ் நிறுவனத்துக்கு எத்தனையாவது இடம்?

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

List of Most Valuable Companies in the World ... How Much Place for TCS?

 

உலக அளவில் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்கும் 'Accenture'- க்கு அடுத்ததாக டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. இரண்டாம் இடத்தில் இருந்த ஐ.பி.எம். நிறுவனத்தை நான்காம் இடத்திற்கு தள்ளி நாட்டின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

 

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களைத் தரப்படுத்துவதில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் பிராண்ட் பைனான்ஸ் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில்,  'Accenture' நிறுவனம் உலகில் மிகவும் மதிப்பு மிக்க மற்றும் வலிமையான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் என்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

முதலிடத்தில் உள்ள  'Accenture' நிறுவனத்தின் 2022- ஆம் ஆண்டின் பிராண்ட் மதிப்பு 36.19 பில்லியன் டாலர்களாகவும், இரண்டாம் இடத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 16.78 பில்லியன் டாலர்களாகவும், மூன்றாம் இடத்தில் உள்ள இன்போசிஸின் பாதிப்பு 12.77 பில்லியன் டாலர்களாகவும் உள்ளனர். 

 

கடந்த ஆண்டைவிட 34 சதவிகிதம் சரிவு கண்டுள்ளதன் காரணமாக, நான்காம் இடத்திற்கு தள்ளப்படுள்ள ஐ.பி.எம். நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு, 10.58 பில்லியன் டாலர்களாக உள்ளது. உலக அளவில் முதல் 25 இடங்களில் டிசிஎஸ், இன்போசிஸிஸ் தவிர மேலும் நான்கு இந்திய நிறுவனங்களும் உள்ளன. 

 

7- வது இடத்தில் விப்ரோ நிறுவனமும், 8- வது இடத்தில் ஹெச்.சி.எல். நிறுவனமும், 15- வது இடத்தில் டெக் மகிந்திராவும், 22- வது இடத்தில் எல்&டி இன்போடெக் நிறுவனமும் உள்ளது. 

 

உலக பொருளாதாரத்தில் கடுமையான தாக்கம் இருந்தபோதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்துறை வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது பிராண்ட் பைனான்ஸ் (Brand Finance) வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் பரிசு தருவதாக ஐடி பெண் ஊழியர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; விசாரணையில் திடுக்

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
IT female employee douses petrol and sets her on fire while giving birthday gift; Shocked at the investigation

செங்கல்பட்டில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அடுத்துள்ள பகுதி பொன்மார். அங்குள்ள வேதகிரி நகரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் மதுரை தெப்பக்குளம்பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்ணகி நகர்ப் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கியிருந்த பெண் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

காதல் விவகாரத்தில் பெண் இறந்திருக்கலாம் என என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்திருக்கும் நிலையில் வெற்றி என்ற நபரை முதற்கட்டமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மிகவும் கொடூரமானது இன்று அப்பெண்ணுக்கு பிறந்தநாள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிறந்தநாள் அன்றே இளம்பெண் கொடூரமான முறையில் கை கால்கள் கட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கைது செய்யப்பட்ட வெற்றிமாறன் நீண்ட நாட்களாக அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். வெற்றிமாறன் திருநம்பி என தெரியவந்துள்ளது. அவரது இயற்பெயர் பாண்டி மகேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. அவர் திருநம்பி என்பதால் அப்பெண் அவரை தவிர்த்துள்ளார். இந்நிலையில் வேறொரு நபருடன் அப்பெண் பழகியதால் இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி காதலியை அழைத்துச் சென்ற வெற்றிமாறன் கை கால்களை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

கை கால்களை கட்டி ஐ.டி பெண் ஊழியர் எரித்துக் கொலை; பிறந்தநாளிலேயே நிகழ்ந்த கொடூரம்

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
Female IT worker tied hands and feet and burnt  The atrocity that happened on his birthday

செங்கல்பட்டில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அடுத்துள்ள பகுதி பொன்மார். அங்குள்ள வேதகிரி நகரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் மதுரையை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்ணகி நகர்ப் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கியி ருந்த பெண் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

காதல் விவகாரத்தில் பெண் இறந்திருக்கலாம் என என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்திருக்கும் நிலையில் வெற்றி என்ற நபரை முதற்கட்டமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மிகவும் கொடூரமானது இன்று அப்பெண்ணுக்கு பிறந்தநாள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிறந்தநாள் அன்றே இளம்பெண் கொடூரமான முறையில் கை கால்கள் கட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.