Skip to main content

கர்நாடகாவில் திடீர் திருப்பம்; காங்கிரஸுக்கு லிங்காயத்து சமூகம் ஆதரவு - பின்னடைவில் பாஜக?

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

Lingayat community supports Congress party in Karnataka elections

 

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு லிங்காயத்து சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

 

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி இன்று மாலையுடன் கர்நாடகாவில் அனைத்து கட்சி பிரச்சாரங்களும் நிறைவடைகிறது. 

 

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் முக்கிய வாக்குவங்கியாக இருக்கும் லிங்காயத்து சமூகத்தின் வீர சைவ லிங்காயத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், லிங்காயத்து சமூக மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் பல தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கக் கூடியவர்களாக லிங்காயத்து சமூகத்தினர்  இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் லிங்காயத்து சமூகத்தின் வாக்குகள் பாஜகவிற்கே இருந்துள்ளது. கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும் பாஜகவின் முக்கியத் தலைவருமான எடியூரப்பா லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால் லிங்காயத்து சமூக மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகள் பாஜக வசமே இருந்தது. 

 

இந்த நிலையில்தான் பாஜக தலைமைக்கும் எடியூரப்பாவிற்கும் உள்ள கருத்து வேறுபாடு, அதுமட்டுமில்லாமல் லிங்காயத்து சமூகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டரும் பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தது உள்ளிட்ட பல விசயங்கள் லிங்காயத்து சமூகத்தின் வாக்கு காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது காங்கிரஸ் கட்சிக்கும் கூடுதல் பலத்தையும், பாஜவிற்கு பின்னடைவையும் கொடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.