Skip to main content

"எங்கள் இயக்கம் தற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளது" - காசிப்பூர் எல்லையில் இருந்து வெளியேறிய ராகேஷ் திகைத்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

rakesh tikait

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த விவசாயிகளின் போராட்டம் அண்மையில் வெற்றியுடன் நிறைவடைந்தது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு, போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக உத்தரவாதம் வழங்கியுள்ளது.

 

மத்திய அரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், போராட்டத்தைத் தற்காலிகமாக கைவிடுவதாகவும், உத்தரவாதம் அளித்துள்ள மத்திய அரசு, அவற்றை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் எனவும் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், போராட்டக் களத்திலிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கினர்.

 

ஏற்கனவே சிங்கு மற்றும் திக்ரி எல்லைப்பகுதியிலிருந்து விவசாயிகள் வெளியேறிய நிலையில், தற்போது காசிப்பூர் எல்லையில் மீதமிருந்த விவசாயிகளும் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தலைமையில் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டனர். அப்போது பேசிய ராகேஷ் திகைத், தங்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாவும், அது திரும்பப்பெறப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "எங்களுடன் இருந்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். லங்கார்களை நடத்தியவர்களுக்கும், எங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுவந்த கிராம மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்ற பிறகு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. எங்கள் இயக்கம் தற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளது. திரும்பப் பெறப்படவில்லை" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.