கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், கேரளா மூணாறு.பெட்டி முடிபகுதியில் உள்ளகண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில்தோட்டதொழிலாளர்கள்குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கிய80 பேரை காணவில்லை என்றவெளியானநிலையில்,நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேர் உடல்கள் சடலமாக இன்றுகாலையில் மீட்கப்பட்டது.இந்நிலையில் மேலும் 10பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14ஆகஉயர்ந்துள்ளது. மேலும் 12பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூணாறுஅரசுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலார்களின்வீடுகள் முழுமையாக சேதம்அடைந்துள்ளது.
குடியிருப்பில் இருந்த80 பேர்காணாமல்போயுள்ளனர்.அதேபோல்அந்த குடியிருப்பில் இருந்தவர்களில்சிலர்தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும்எனவும்அஞ்சப்படுகிறது. தற்போது வரை மீட்புபணிகள்தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.