Skip to main content

இரட்டை தலையுடன் பிறந்த ஆடு... ஆச்சரியத்தில் கிராமத்தினர்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

இயற்கையின் படைப்பில் அடிக்கடி சில விசித்திர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் இரட்டை தலையுடன் ஆடு ஒன்று பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்த துர்கா பகுதியில் விவசாய வேலை செய்பவர் ராயன். இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை தன்னுடைய வீட்டில் வளர்த்து வருகின்றார். அதில் ஒரு ஆட்டுக்குட்டி இன்று குட்டியை ஈன்றுள்ளது. 



ஆனால் அது வழக்கமான குட்டியை போன்று இல்லாமல் இரண்டு தலையுடன் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதன் உரிமையாளர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து சோதித்ததில் ஆடு இயல்புக்கு மாறான அமைப்புடன் இருப்பதால் விரைவில் மரணமடைய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அவர் சோகமாக உள்ளார். அப்பகுதி பொதுமக்கள் அந்த ஆட்டை ஆச்சரியமாக பார்த்து செல்கிறார்கள்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடிய இருவர் கைது

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

 Two arrested for stealing a goat on a two-wheeler

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மாலை வேளையில் வந்த இருவர் ஆட்டை திருடிச் சென்றதாக புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மாட்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன். இவர் அவருடைய தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அத்தனூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஆட்டை திருடியது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வெண்ணந்தூர் காவல் நிலைய போலீசார் சர்மா, லோகேஷ் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Next Story

குடும்பத்துடன் காரில் வந்து ஆடுகள் கடத்தல்; போலீசார் விசாரணை

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

Arriving in a car with family and smuggling goats; Police investigation

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் சாலைகளில் உணவு தேடி அலைவதும், மாலை வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றித் திறந்து கொண்டிருப்பதை பார்த்த காரில் குடும்பத்துடன் வந்த மர்ம நபர்கள் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பிப்பது போல், ஆட்டுக்கு பிஸ்கட் கொடுத்து காரில் தூக்கி போட்டுள்ளார். இதேபோல் ஒன்றன்பின் ஒன்று என 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக காரில் சிலர் ஆடுகளை திருடுவதைக் கண்டு தன்னுடைய செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானதால் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.