Skip to main content

பாலியல் வன்கொடுமை செய்து தூக்கிலிடப்பட்ட சிறுமிகள்

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

lakhimpur kheri case; 2 girls passed away

 

உத்திர பிரதேசம் மாநிலத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் சிறுமிகள் இருவரின் உடல் கரும்புத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியது. அவர்களை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக சிறுமிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த கொலையை தற்கொலை போல சித்தரிக்க முயலுவதாக புகார் எழுப்பிய குடும்பத்தினர் கொலை செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். 

 

சிறுமிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடந்து விசாரணை செய்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

லக்கிம்பூர் கலவரம்: மத்திய அமைச்சர் மகன் விவகாரத்தில் அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் 

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

Supreme Court cancels bail of Ashish Mishra

 

கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் பலியானர். மேலும், ஆஷிஸ் மிஸ்ரா அந்த சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.

 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஆஷிஸ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம், பிப்ரவரி 10ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில், ஆஷிஸ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் என்ற கெடுவும் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

விவசாயிகள் குறித்து அச்சம்: பாதுகாப்புப்படை புடைசூழ வாக்களித்த மத்திய இணையமைச்சர்!

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

AJAY MISHRA

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், கடந்த ஆண்டு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆஷிஸ் மிஸ்ரா அந்த சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.

 

இந்தநிலையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் கீழ், இந்த விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 14 பேருக்கு எதிராக 5000 பக்க குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

 

இந்தச்சூழலில் அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து  ஆஷிஸ் மிஸ்ரா சில நாட்களுக்கு முன்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்தநிலையில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து லக்கிம்பூரில் கார் ஏறியதில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர்கள், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

 

இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தின் நான்காம் கட்ட தேர்தலில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, பாதுகாப்புப் படை வீரர்கள் புடைசூழ வந்து வாக்களித்தார். வாக்குச் சாவடிக்கு வரும்போதும், வாக்களித்துவிட்டுச் செல்லும்போதும் செய்தியாளர்களைச் சந்திப்பதையும் அஜய் மிஸ்ரா தவிர்த்தார். இது சமூகவலைதளங்களில் பேசுபொருளான நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதாலேயே அஜய் மிஸ்ரா பாதுகாப்புப் படை வீரர்கள் புடைசூழ வாக்களிக்க வந்ததாகக் கூறப்படுகிறது.