Skip to main content

குமாரசாமி பதவியேற்பு விழா - ராகுல்காந்தி பங்கேற்கிறார்

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

 

கர்நாடக முதல்வராக வரும் திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு குமாரசாமி பதவி ஏற்கிறார்.  இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.  

மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத்பவார், சந்திரசேகர் ராவ்,சந்திரபாபு ,நாயுடு, அஜித்சிங் மற்றும் தேசிய அளவிலான முக்கிய எதிர்கட்சித் தலைவர்களுக்கு கர்நாடக காங்கிரஸ்- மஜத அழைப்பு விடுத்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாடாளுமன்ற அத்துமீறலின் போது பா.ஜ.க எம்.பி.க்கள் பயந்து ஓடிவிட்டனர்’ - ராகுல் காந்தி விமர்சனம்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Rahul Gandhi crictizes BJP MPs ran away in fear during Parliament encroachment

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி, மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வந்ததால், இந்த இரு அவைகளிலும் எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து, இதுவரை மொத்தமாக இந்த கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் இன்று (22-12-23) ஒன்றிணைந்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். 

இந்தப் போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “சில இளைஞர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து புகை குப்பிகளை வீசியவுடன், தங்களை தேச பக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பா.ஜ.க எம்.பி.க்கள் ஓடிவிட்டனர். நாங்க இந்த காட்சியை நேரில் கண்டோம். ஆனால் ஊடகங்களில் அது ஒளிபரப்பப்படவில்லை. நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்த சம்பவத்தில் ஒரு கேள்வி இருக்கிறது. அத்துமீறி நுழைந்தவர்கள் ஏன் இந்த வழியில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாட்டில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டம்தான் இதற்குப் பதில். ஆனால், நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி எந்த ஊடகங்களும் பேசவில்லை. ஆனால், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே அமர்ந்து போராட்டம் செய்து கொண்டிருந்தபோது, நான் பதிவு செய்த வீடியோவைப் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். 

Next Story

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2000; காங்கிரஸை விமர்சிக்கும் குமாரசாமி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

 kumarasamy talks about karnataka family women 2 thousand amount scheme

 

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது.

 

இதையடுத்து கர்நாடகாவில் அமல்படுத்த உள்ள இலவச மின்சார திட்டம் சொந்தமாக வீடு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் பொருந்தாது என்று மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா ட்விட்டரில், "வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும். வறுமைக்கோட்டுக்கு கீழ் மற்றும் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ரூ.2,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஆனால் வருமான வரி செலுத்துவோர் மற்றும் ஜிஎஸ்டி பதிவு செய்தவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது" எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் பெங்களூருவில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது குறித்து அவர் பேசுகையில், "நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி கூறியது என்ன. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றனர். வீடுகளுக்கு 200 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றனர். ஆனால் தற்போது காங்கிரஸ் அரசு இந்த திட்டங்களுக்கு பல்வேறு விதிமுறைகளை வகுத்து வருகிறது.

 

தற்போது சமூக வலைத்தளங்களில் தோசை கதை வைரலாகி வருகிறது. அதாவது ஹோட்டல்களில் தோசை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து விட்டு அதே நேரம் தோசைக்கு வைக்கும் சட்னிக்கு அதிக விலை வாங்குகிறார்களாம். அதுபோல தான் காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் இலவச திட்டங்கள் நிபந்தனையின்றி வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு தற்போது விதிமுறைகளை வகுத்து வருகின்றனர். வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்துபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் பணம் கிடைக்காது என்று முதல்வர் கூறுகிறார். இது குறித்து மக்களிடம் எடுத்து கூறுவேன்" என்று தெரிவித்துள்ளார்.