உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் விசாரணையின்போது கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் செங்காருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
உ.பி., உன்னாவ் பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணம் தொடர்பான வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். மேலும், இந்த வழக்கில் குல்தீப், அவரது சகோதரர், இரண்டு காவலர்கள் உட்பட ஆறு பேருக்கு இந்த சிறைத் தண்டனை வழக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கர் மற்றும் அவரது சகோதரர் அதுல் செங்கர் ஆகியோர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Show comments