பசையை வைத்து மனைவியை கட்டிய கணவனே கொலை செய்த சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் விசிசா நகரில் உள்ள வீட்டில் பெண் ஒருவர் சுயநினைவின்றி கிடப்பதாக தகவல் வந்தபொழுது போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர் அப்போது வீட்டில் முடங்கி கிடப்பதாக சொல்லபட்ட பெண்ணின் வாய் ,கண், மூக்கில் பசை திணிக்கப்பட்டு மூச்சு திணறலால் கொடூரமாக இறந்துகிடந்தார். அதை பற்றி அவர்களது மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் தந்தைதான் பசையை அவரது வாய் மற்றும் கண், மூக்கில் திணித்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொன்றதாக தெரிவித்துள்ளனர். இதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் சம்பந்தப்பட்ட ஹேக்கரான் என்ற அந்த நபரை தேடிவருகின்றனர்.