Skip to main content

ஓடும் ரயிலில் ''கிக்கி சேலன்ஞ்'' செய்த இளைஞர்களுக்கு துப்புரவு தண்டனை

Published on 10/08/2018 | Edited on 10/08/2018

அண்மைக்காலமாக ''ஃபீல் மை ஹார்ட்'' ஈன்ற பெயரில் இளைஞர்கள் கார் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே காரின் டிரைவிங் சீட்டிலிருந்து இறங்கி பாடலுக்கு நடனமாடி திரும்பவும் காரில் ஏறும்  கிக்கி சேலன்ஞ்  எனும் அபாயகர  நடன முறை பிரபலமாகி வருகிறது.

 

KIKKI

 

 

 

இதுபோன்ற நடனத்தில் ஆண்கள் மட்டுமின்றி பல இளம்பெண்களும் ஓவர் கான்பிடென்சில் இறங்கி உயிரிழப்பு சம்பவமும் அதிகரித்து வருகிறது. இந்த வினோத முறையினை போலீசார் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் இந்த அபாய நடனம் வெளிநாடுகள் மட்டுமன்றி இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. கிக்கி சேலன்ஞ்  என்ற பெயரில் இளைஞர்கள் வாகனங்களில் இருந்து இறங்கி நடனமாடி அதை வீடியோ பதிவு செய்து வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் மூன்று இளைஞர்கள் வசாய் ரயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் இருந்து இறங்கி ''கிக்கி சேலன்ஞ்'' செய்து அதை வீடியோ எடுத்து போட்டுள்ளனர். அந்த வீடியோவை சுமார் 2 லட்சம் பேர் இணையத்தில் பார்த்துள்ளனர். அந்த மூன்று நபர்களும் ரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு வசாய் ரயில் நிலைய நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் அந்த மூன்று இளைஞர்களும் காலை 11 மணிமுதல் 2 மணிவரையும், மாலை 3 முதல் 5 மணிவரையும் மூன்று நாட்கள் ரயில் நிலையத்தை சுத்தம் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.