Skip to main content

ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கியா மோட்டார்ஸின் இந்தியப் பிரிவு

Published on 08/02/2019 | Edited on 08/02/2019

தென் கொரியா கார் தயாரிப்பு நிறுவனமான ‘கியா’ அதன் புதிய உற்பத்தி ஆலையை 536 ஏக்கர் பரப்பளவில் ஆந்திராவில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது.  ஹூண்டாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமே கியா மோட்டார்ஸ்  என்பது குறிப்பிடத்தக்கது. 

 

k

 


அந்தத் திறப்பு விழாவில் பேசிய அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் படுத்துதல் பிரிவு அதிகாரி மனோகர் பட் (Manohar Bhat) "நமது நிறுவனத்தின் முதல் தயாரிப்பு எஸ்.பி.2 ரகம். இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டு விற்பனைக்கு வரும். மேலும் கியா மோட்டார்ஸ் ஆறு மாதத்திற்கு ஒரு புதிய மாடல் காரையும் அறிமுகம் செய்யும், கியா கார் விற்பனை வரும் ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ. 9 முதல் ரூ. 16 இலட்சம் வரை இருக்கும்” என்று தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தற்போது அதன் உற்பத்தி ஆலை அருகே திறக்கபோவதாக அறிவித்துள்ளது. 

 


புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் கூஹயூன் ஷிம், “தற்போதுவரை கியா நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைத்தான் பயன்படுத்திவருகிறது. ஆனால் தற்போது அதனை தனியாகப் பிரித்து எங்களுக்கென தனியாக ஒரு ஆராய்ச்சி மற்றும் மேபாட்டு மையத்தை உருவாக்கப்போகிறோம்” என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக ஆந்திர அரசுடனும் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய நிறுவனமான ஓலாவில் ரூ.2,070 கோடியை முதலீடு செய்த பிரபல கொரிய நிறுவனங்கள்...!

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

இந்திய கால் டாக்ஸி நிறுவனமான ஓலா-வில், கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 30 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளன. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2,070 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.  

 

hyundai

 

கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா மற்றும் அதன் கிளை நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனமும் ஓலா நிறுவனத்தில் முதலீடு செய்து ஒப்பந்தம் செய்துள்ளன. 
 

kia

 

அதன்படி இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து போக்குவரத்துக்கு தீர்வு காண்பது, இந்தியாவுக்கு ஏற்ற பேட்டரி வாகனங்களை செயல்படுத்துவது மற்றும் அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்டவை ஒப்பந்தத்தில் அடங்கும். போக்குவரத்துக்கு ஏற்ற வாகனங்களை தயாரிப்பது அவற்றை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றை இவ்விரு நிறுவனங்களும் மேற்கொள்ளும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஓலா ஓட்டுநர்களுக்கு நிதி சேவை, குத்தகை மற்றும் சுலப தவணைகள் செலுத்தி வாகனத்தை பெறுவது எளிதாகும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

ஆந்திராவில் கார் தயாரிப்பை தொடங்கும் கியா மோட்டார்ஸ்...

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

 

kk

 

தென் கொரியா கார் தயாரிப்பு நிறுவனமான ‘கியா’ அதன் புதிய உற்பத்தி ஆலையை 536 ஏக்கர் பரப்பளவில் ஆந்திராவில் தொடங்கியுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்றுவந்தது. இது தற்போது முடிந்து, இன்று அதன் திறப்பு விழா நடந்தது. இந்த திறப்பு விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கியா மோட்டார்ஸின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் கூஹயூன் ஷிம் மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

 

இந்த திறப்பு விழாவில் பேசிய அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் படுத்துதல் பிரிவு அதிகாரி மனோகர் பட் (Manohar Bhat) "நமது நிறுவனத்தின் முதல் தயாரிப்பு எஸ்.பி.2 ரகம். இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டு விற்பனைக்கு வரும். மேலும் கியா மோட்டார்ஸ் ஆறு மாதத்திற்கு ஒரு புதிய மாடல் காரையும் அறிமுகம் செய்யும், கியா கார் விற்பனை வரும் ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ. 9 முதல் ரூ. 16 இலட்சம் வரை இருக்கும்” என்று தெரிவித்தார். ஹூண்டாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமே கியா மோட்டார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.