Skip to main content

விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடத்திய கேரள முதல்வா்!  

Published on 26/10/2020 | Edited on 26/10/2020
occasion of Vijayadasamy in kerala

 

நவராத்திாி விழாவையொட்டி 10 ஆவது நாளான விஜயதசமி  அன்று கோவில்களில் நடத்தப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி என்பது ஒரு முக்கிய பிரதானம் ஆகும். இந்த நாளில் பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கி வைக்கும் விதமாக வித்யாரம்பம் நடத்தப்படுவது வழக்கம். அந்த நாளில் குழந்தைகளுக்கு நாவில் தங்க ஊசியால் எழுத்துகளை  எழுதுவதும் தட்டில் அாிசி அல்லது நெல் மணிகளை வைத்து குழந்தைகளின் விரலால் கொண்டு 'ஹாி ஸ்ரீ கணபதயே நம' என முதலில் எழுதி கொண்டு அடுத்து தாய்மொழி எழுத்துகளில் அ, ஆ எழுதுவாா்கள்.

இப்படி விஜயதசமி அன்று கல்வி ஊட்டப்படும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவாா்கள் என்பது காலம் காலமாக கடந்து நிற்கும் ஐதீகம். இந்நிலையில் இன்று 26-ம் தேதி முக்கிய இந்து கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தபட்டது. இதில் கல்வியில் நல்ல நிலையில் இருக்கும் பொியவா்கள், சமுதாயத்தில் நல்ல மதிப்போடு உள்ளவா்கள், கோவில் பூசாாிகளின் மடியில் குழந்தைகளை உட்கார வைத்து பெற்றோா்களின் முன்னிலையில் வித்யாரம்பம் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலும் பல கோவில்களில் நடத்தப்பட்டது

இதே போல் கேரளாவிலும் பல கோவில்களில் வித்யாரம்பம் நடத்தப்பட்டது. இதில் குறிப்பாக திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன், காிக்கம் சமூண்டீஸ்வாி  கோவில் பத்மநாபசுவாமி கோவில் நவராத்திாி மண்டபம், பூஜைபுர சரஸ்வதி அம்மன் கோவில், மேலும் சக்குளத்து காவு பகவதி அம்மன் கோவில்களில் வித்யாரம்பம் நடந்தது. இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.

மேலும் கேரளா முதல்வா் பிணராய் விஜயன் தன்னுடைய இல்லத்தின் அவருடைய காா் ஓட்டுனா் வசந்தகுமாாின் பேரப்பிள்ளைகளுக்கும் உறவினா்கள் குழந்தைகளுக்கும் வித்யாரம்பத்தை தொடங்கி வைத்தாா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலின் வரிசையில் வீணா விஜயன்; கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்கு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kerala CM Pinarayi Vijayan daughter filed a case against the Enforcement Directorate

கேரள முதல்வர் பிணராய் விஜயன் மகள் வீணா விஜயன் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன் என்ற ஐடி நிறுவனத்தை நடத்திவருகிறார். கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி(சி.எம்.ஆர்.எல்) நிறுவனம் மூலம் வீணா விஜயனின் நிறுவனமான எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு  சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திலும், அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில்தான், சி.எம்.ஆர்.எல் நிறுவணம் வீணா விஜயனின்  ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’ நிறுவனத்திடம் சாப்ட்வேர் அப்டேட் செய்து தருவதற்காக தவணை தவணையாக ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’  நிறுவணம் எந்த விதமான சாப்ட்வேர் அப்டேட்டையும் செய்து கொடுக்கவில்லை என்பது வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணத்தில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொடுக்கவில்லை என்றாலும், எதற்காக வீணா விஜயன் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்ததை தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டது

இதனிடையே இதுகுறித்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் அமலாக்கத்துறைக்கு கொடுத்த்தாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில் பிணராயி விஜயன் மகள் வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவே அமலாக்கத்துறையை ஏவி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் தற்போது, கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.