Skip to main content

இளைஞரின் உயிரை பறித்த 450 கோடி ரூபாய்... சந்தேகத்தால் நண்பர்களே உயிரை எடுத்த பரிதாபம்...

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

கிரிப்டோகரன்சி தொழிலில் ஈடுபட்டுவந்த கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், அவரது நண்பர்களாலேயே கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

 

kerala youth losses in bitcoin business

 

 

கேரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஷாகூர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிப்டோகரன்சி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த மூலமாக சுமார் 450 கோடி ரூபாய் வரை பலரிடம் வசூல் செய்து தொழிலை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தொழில் நஷ்டம் அடைந்ததும், பணம் கொடுத்தவர்கள் இவரை தேட ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து தனது நண்பர்களுடன் கேரளாவை விட்டு வெளியேறிய அவர் டேராடூன் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது நண்பன் ஒருவனிடம், இருக்கும் குறைவான தொகையை வைத்து புதிய கிரிப்டோகரன்சியை உருவாக்கி பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதன் மூலம் பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதனை கேட்ட அப்துல் ஷாகூரின் நண்பன், அவரது அக்கவுண்டில் கோடிக்கணக்கான பணம் இருக்கலாம். அந்த நம்பிக்கையில் தான் மீண்டும் தொழில் தொடங்கலாம் என கூறுகிறார் என்று நினைத்துள்ளார். எனவே அவரது அக்கவுண்ட் பாஸ்வோர்டை வாங்க நினைத்துள்ளார். எனவே அவரை டேராடூன் பகுதியில் தனியாக ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஷாகூரின் மற்ற நண்பர்களும் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து அவரது பாஸ்வோர்டைகேட்டு அவரை சித்திரவதை செய்துள்ளனர்.

ஆனால் தன்னிடம் பணம் இல்லை என ஷாகுர் தெரிவித்த போதும், அவர்கள் நம்பாமல் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். இந்த தொடர் சித்திரவதைகளால் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரை எப்படியாவது காப்பாற்றி பாஸ்வோர்டை வாங்க வேண்டும் என நினைத்து அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து , அவரை மருத்துவமனை பார்க்கிங் பகுதியிலேயே விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த டேராடூன் போலீசார் சிசிடிவி ஆதாரங்களை கொண்டு தற்போது குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

“வெறுப்புக்கு எதிராக வாக்களியுங்கள்” - பார்வதி வேண்டுகோள்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
actress parvathy request to voters for election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கர்நாடகாவில் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ், கன்னட நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 

இதனிடையே மலையாள நடிகை பார்வதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவரது ஸ்டோரிசில், “வெறுப்புக்கு எதிராக. வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். உங்கள் சக மக்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். பொய்கள் மற்றும் கோழைத்தனத்திற்கு எதிராக, 'விகாஸ்' என்று முகமூடி அணிந்தவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.