Skip to main content

ராகுல்காந்தியின் பேச்சை மொழிபெயர்த்து அசத்திய அரசு பள்ளி மாணவி!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தியின் ஆங்கில பேச்சை தமிழில் தவறுதலாக மொழி பெயர்த்த விவகாரம் அப்போது தொலைக்காட்சிகளில் வரை விவாத பொருளாக மாறியது. அதே போல் கேரளா வந்த பிரியங்கா காந்தி மற்றும் மா.கம்யூனிஸ்ட் பிருந்தாகாரத் ஆகியோரின் ஆங்கில பேச்சின் மொழி பெயர்ப்பும் தவறுதலாக இருந்தது.
 

இந்த நிலையில் ராகுல்காந்தியின் எம்.பி தொகுதியான கேரளா வயநாட்டில் உள்ள மலைகிராமமான கருவாரகுந்து அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது தொகுதி நிதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்ட அறிவியல் ஆய்வு கூடத்தை ராகுல்காந்தி திறந்து வைத்தார். அப்போது அவரின் ஆங்கில பேச்சை மலையாளத்தில் மொழி பெயர்க்க ஆசிரியர் அனில்குமார் தயாராக இருந்த போதும் ராகுல்காந்தி அங்கு கூடியிருந்த மாணவ மாணவிகளை பார்த்து எனது பேச்சை மொழி பெயர்க்க உங்களில் யார் தயாராக இருந்தாலும் வாருங்கள் என கூறினார்.

kerala wayanadu rahul gandhi speech translate govt school student

அப்போது நிசப்தமாக இருந்த அந்த மாணவா்கள் கூட்டத்தில் இருந்து நான் வருகிறேன் என்று +2 படிக்கும் அறியியல் பிரிவு மாணவி ஷஃபா பெஃவின் பலத்த கரகோஷத்துடன் எழுந்து மேடைக்கு வந்த அவளை உற்சாகத்துடன் மேடை படிக்கட்டில் வந்து மாணவியின் தோளில் தட்டி வரவேற்றார் ராகுல்காந்தி.  

அதைத் தொடர்ந்து பேசிய ராகுல்காந்தியின் ஆங்கில மொழியை மாணவி  ஷஃபா பெஃவின் எந்த வித பதட்டமும் இல்லாமல் அந்த ஊா் சிலாங்கில் மக்களுக்கு புரியும் விதமாக சந்தேகமும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமலும் மலையாளத்தில் மொழி பெயர்த்தார். ராகுல் காந்தி இன்றைய காலகட்டத்தில் அறிவியலின் முன்னேற்றம் பற்றி பேசியதை அந்த மாணவி விவரித்து விளக்கமாக பேசியது, அங்கிருந்த ஆசிரியர்களையும் மெய்சிலிர்க்க வைத்ததாக ஆசிரியர்கள் கூறினார்கள். 

பின்னர் அந்த மாணவிக்கு ராகுல்காந்தி சாக்லெட் கொடுத்து வாழ்த்தினார். அதோடு மாணவியை ஆசிரியர்களும் சக மாணவா்களும் கட்டி தழுவி வாழ்த்தினார்கள். மாணவியின் மொழிபெயர்பை பெற்றோர்கள் தந்தை குன்னிமுகமது தாயார் ஷமிரா தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.