Advertisment

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மருத்துவமனை ஊழியர் கைது 

kerala trichur government hospital woman incident  

Advertisment

கேரளாவில்உள்ள திருச்சூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ஒருவர் குடும்ப பிரச்சனையால்விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் இளம்பெண்ணை மீட்டு கொடுங்கலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் இளம்பெண்ணை அனுப்பி வைத்தனர்.

அப்போது ஆம்புலன்சில்மருத்துவமனை ஊழியர்தயலால்என்பவர் சென்றுள்ளார். அப்போது தயலால்,இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டஇளம்பெண், திருச்சூர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தயலால்தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தயலாலை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police Ambulance Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe