Skip to main content

துன்புறுத்தலுக்கு ஆளான மாற்றுத்திறனாளி சிறுவன்! -போக்சோ சட்டத்தில் பெண் கைது! 

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

மைனர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி போக்சோ சட்டத்தில் கைதாவது ஆண்கள் மட்டும்தான் என்றெண்ணி விடாதீர்கள்.  பெண்களில் வெகு சிலரும் கொடுமையான அத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தில் கைதாகின்றனர்.     

 

திருவனந்தபுரம் – நெடுமங்காடு – கருப்பூரைச் சேர்ந்தவள் திவ்யா. மூன்று குழந்தைகளின் தாயான இவள், கணவரிடமிருந்து விவகாரத்து பெற்றவள். நெடுமங்காடு காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ்குமார் போக்சோ சட்டத்தில் இவளைக் கைது செய்திருக்கிறார். ஏன் தெரியுமா? 

 

திவ்யாவின் பக்கத்து  வீட்டில்  பெற்றோருடன் வசிக்கிறார் மாற்றுத்திறனாளியான ஹரி  (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்பட்ட நிலையில், தன் உடலிலுள்ள சில அறிகுறிகளை பெற்றோரிடம் காண்பிக்கிறார். உடனே, பெற்றோர் ஹரியிடம் விசாரித்திருக்கின்றனர். ஹரி நடந்ததைச் சொல்லிவிட, அதிர்ந்துபோன அவர்கள், நெடுமங்காடு காவல்நிலையத்தில் திவ்யா மீது புகார் அளித்தனர். 

 

kerala thiruvananthapuram The boy who is the victim of persecution! Woman Arrested In pocso act

 

கணவர் இல்லாமல் தனிமையில் வாழ்ந்த திவ்யா, மாற்றுத்திறனாளி என்பதால் வெளியில் தெரிந்துவிட வாய்ப்பில்லை என்று கருதி, ஹரியைத் தன் உடற்பசிக்கு இரையாக்கி வந்திருக்கிறார். மைனர் வயது ஹரிக்கு திவ்யா தந்த தொந்தரவால் உடல் பாதிப்புக்கு ஆளானது. காவல்துறை நடத்திய விசாரணையிலும், திவ்யா வரம்புமீறி ஹரியுடன் நடந்துகொண்டது உறுதியாகிவிட, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறாள்.

   

ஒரு தாயாக இருந்து ஹரி மீது அன்பு செலுத்த வேண்டிய இடத்திலுள்ள  திவ்யாவின் மனதில் இப்படி ஒரு வக்கிரம் புகுந்து  ஆட்டுவித்தது கொடுமைதான்!   

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

“குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்” - ப.சிதம்பரம் திட்டவட்டம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
The Citizenship Amendment Act will be repealed says p Chidambaram

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலையின்மை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் ஆகும். சில பிரிவினர் இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பிரச்சனை. எனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய வேலையின்மை விகிதம் இருந்ததில்லை.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது, உழைக்கும் மக்கள் தொகை குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது. அதாவது வேலையின்மை 42% ஆக உள்ளது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களின் அவமானகரமான நிகழ்வு இதுவாகும்.

பல்வேறு சட்டங்களின் தொகுப்புகளை நாங்கள் ரத்து செய்வோம், திருத்துவோம் மற்றும் மதிப்பாய்வு செய்வோம். அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிச் சட்டம் 2020,  இந்திய தண்டணைச சட்டத்திற்கு (IPC) இணையான பாரதிய நியாய சன்ஹிதா,  கிரிமினல் தண்டனைச் சட்டம் (CrPC) என்ற பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் ஆதாரச் சட்டமான பாரதிய சாக்ஷ்யா சட்டம்.

இந்த ஐந்து சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். பின்னர் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். அப்போது 25 சட்டங்கள் திருத்தப்பட்டு அரசியலமைப்புக்கு இணையாக கொண்டு வரப்படும். எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.