Skip to main content

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண் சப்-கலெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.

Published on 14/06/2020 | Edited on 14/06/2020
SreedhanyaIAS




விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் அப்துல் கலாம் கேட்டுக்கொண்ட கனவு காணுங்கள் என்ற கூற்றும் தான் ஸ்ரீதன்யா சுரேஷை ஐ.ஏ.எஸ். ஆக்கியுள்ளது. இந்தியாவின் பழங்குடியினத்தை சோ்ந்த முதல் ஐ.ஏ.எஸ். என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஸ்ரீதன்யா சுரேஷ் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பொழுதனா பஞ்சாயத்தில் துரியோடு கிராமத்தை சோ்ந்தவா். பழங்குடியினத்தில் "குறிச்சியா' இனத்தை சோ்ந்த தினக்கூலி தொழிலாளிகளான சுரேஷ்-கமலா தம்பதியினரின் மூத்தமகள் தான் ஸ்ரீதன்யா சுரேஷ்.


அடுக்கி வைக்கப்பட்ட மூடைகளில் அடி மூடையாக கருதபடும் தன்னுடைய இனத்தை கேரளாவில் உள்ள ஒவ்வொரு மலையாளிகளும் உச்சரிக்க வேண்டும். அதற்கு தான் சாதிக்க வேண்டும் என்று சிறுவயதிலே விதை போட்ட ஸ்ரீதன்யாவுக்கு அப்துல் கலாமின் ஊக்கம் நல்லதொரு ஆரோக்கியத்தை ஏற்படுத்தியது. முதலில் கல்வியில் சாதித்து தன்னுடைய லட்சியத்தை அடைய வேண்டும் என்று கருதிய அவர், பள்ளிபடிப்பை அங்குள்ள நிர்மலா அரசுபள்ளியில் தொடா்ந்தார். அதன்பிறகு மேல்நிலைப்பள்ளியை துரியோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்தார். 


அதன்பிறகு உயா்கல்வியை கோழிக்கோடு புனித ஜோசப் கல்லூரியில் விலங்கியல் துறையில் இளங்கலை பட்டமும், கோழிக்கோடு பல்கலைகழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். பின்னா் ஆதிதிராவிடா் நலத்துறையில் அரசு பணி கிடைத்தும் சில நாட்களிலே அந்த பணியை ராஜினமா செய்தார். இதற்கு காரணம் ஸ்ரீதன்யாவின் ஐஏஎஸ் கனவு தான். இந்த நிலையில் ஸ்ரீதன்யாவின் பெற்றோர்கள் அவள் எடுத்த படிப்பாக இருந்தாலும் சரி அரசு பணியை ராஜினமா செய்த போதிலும் அதற்கு ஆதரவாகவும் அவளின் லட்சியத்துக்கு உறுதுணையாகவும் இருந்தனா்.
 

இந்த நிலையில் தனது ஐஏஎஸ் கனவை நிறைவேற்றும் விதமாக சிவில் சா்வீஸ் தோ்வை எழுதி முதல் முயற்சிலே 2018-ல் வெற்றி பெற்று தேசிய அளவில் 410 ஆவது இடத்தை பிடித்தார். அவள் வெற்றி பெற்றதை தொடா்ந்து நாடு முமுவதும் ஸ்ரீதன்யாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. கேரளாவில் முதல்வா், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சி பிரமுகா்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டியுள்ளனர். ம.நீ.ம. தலைவா் கமலஹாசன் ஸ்ரீதன்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 


இந்த நிலையில் டெல்லியில் பயிற்சி முடிந்து மே மாதம் கடைசியில் கேரளா வந்த ஸ்ரீதன்யா சுரேஷ் கரோனா நடைமுறையில் 14 நாட்கள் தனிமைபடுத்தபட்ட பின் கோழிக்கோடு உதவி ஆட்சியராக (சப்-கலெக்டா்) கேரள அரசு நியாமித்தது. இதையடுத்து ஸ்ரீதன்யா சுரேஷ் உதவி ஆட்சியராக பதவியேற்று கொண்டார். இதை தொடா்ந்து அதிகாரிகளும், அந்தபகுதி மக்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.