ADVERTISEMENT

சபரிமலை கோவில் நடை திறப்பு!

07:16 PM Apr 10, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையை முன்னிட்டு, கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஏப்ரல் 18- ஆம் தேதி வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும் எனத் திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

நாளை (11/04/2021) வழக்கம்போல், காலை 05.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜை உள்ளிட்டவை நடைபெறும். நாளை (11/04/2021) ஏப்ரல் 18- ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களில் தினமும் 10,000 பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கரோனா நெகட்டிவ் சான்றுடன் வரும் பக்தர்கள் மட்டுமே சபரிமலை கோயிலில் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT