ADVERTISEMENT

குறைந்த கரோனா பாதிப்பு... நிம்மதி பெருமூச்சி விடும் கேரளா!

07:52 PM Nov 16, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு குறைந்து வருகின்றது.

இன்று 2,710 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6,567 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 4,38,460 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,16,922 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 70,925 ஆக உள்ளது. மேலும், இன்று மட்டும் 19 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாகக் கரோனாவுக்கு 1,783 பேர் பலியாகியுள்ளனர். சில வாரங்களாக அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT