Advertisment

கேரளாவில் தொடர்ந்து குறையும் தினசரி கரோனா பாதிப்பு!

kerala

Advertisment

இந்தியாவில் அதிக தினசரி கரோனா பாதிப்பு உறுதியாகும் மாநிலமாகக் கேரளா இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் அண்மைக்காலமாகத் தினசரி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைவதும், மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டுவதுமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில்அம்மாநிலத்தில் கடந்த 13 ஆம் தேதி11,079 பேருக்கு கரோனா உறுதியானது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம்9,246 பேருக்கு கரோனா உறுதியானது. இந்தநிலையில் நேற்று அம்மாநிலத்தில்8,867பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில்கேரளாவில் இன்று தினசரி கரோனாபாதிப்பு மேலும் குறைந்துள்ளது. அம்மாநிலத்தில் இன்று 7,955 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 57 உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில்11,769 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

STATE HEA Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe