Skip to main content

கேரளாவில் மேலும் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

 

kerala

 

இந்தியாவில் அதிக தினசரி கரோனா பாதிப்பு உறுதியாகும் மாநிலமாக கேரளா இருந்துவருகிறது. அம்மாநிலத்தில் அண்மைக்காலமாக தினசரி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைவதும், மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டுவதுமாக இருந்துவருகிறது.

 

இந்தநிலையில், நேற்று முன்தினம் (13.10.2021) கேரளாவில் 11,079 பேருக்கு கரோனா உறுதியானது. அதனைத்தொடர்ந்து நேற்று அம்மாநிலத்தில் 9,246 பேருக்கு கரோனா உறுதியானது. இந்தநிலையில், இன்று அம்மாநிலத்தில் தினசரி பாதிப்பு மேலும் குறைந்துள்ளது.

 

udanpirape

 

இன்று கேரளாவில் 8,867 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 67 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 9,872 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !