இந்தியாவில் அதிக தினசரி கரோனா பாதிப்பு உறுதியாகும் மாநிலமாகக் கேரளா இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் அண்மைக்காலமாகத் தினசரி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைவதும், மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டுவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில்அம்மாநிலத்தில் கடந்த 13 ஆம் தேதி11,079 பேருக்கு கரோனா உறுதியானது. அதன்பிறகு தொடர்ந்து தினசரி கரோனாபாதிப்பு குறைந்த நிலையில், நேற்று 7643 பேருக்கு கரோனாதொற்று உறுதியானது.
இந்தநிலையில்இன்று மீண்டும் தினசரி கரோனாபாதிப்பு, 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று கேரளாவில் 11,150 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. கரோனாவால்பாதிக்கப்பட்ட 82 பேர் உயிரிழந்துள்ளனர்.