corona

இந்தியாவில் அதிக தினசரி கரோனா பாதிப்பு உறுதியாகும் மாநிலமாகக் கேரளா இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் அண்மைக்காலமாகத் தினசரி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைவதும், மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டுவதுமாக இருந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில்அம்மாநிலத்தில் கடந்த 13 ஆம் தேதி11,079 பேருக்கு கரோனா உறுதியானது. அதன்பிறகு தொடர்ந்து தினசரி கரோனாபாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில், நேற்று 1111,079 பேருக்கு கரோனா உறுதியானது

Advertisment

இந்தநிலையில்இன்று மீண்டும் கேரளாவில் தினசரி கரோனாபாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில்8,733 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியானதுடன், கரோனாவில் பாதிக்கப்பட்ட 118 இறந்துள்ளனர். அதேநேரத்தில்9,855 பேர் கரோனாவிலிருந்துமீண்டுள்ளனர்.