Advertisment

கேரளாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

kerala

Advertisment

இந்தியாவில் அதிக தினசரி கரோனா பாதிப்பு உறுதியாகும் மாநிலமாகக் கேரளா இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் அண்மைக்காலமாகத் தினசரி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைவதும், மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டுவதுமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த 10 ஆம் தேதி, கேரளாவில் 10,691 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. அதன்பின்னர் கடந்த 11 ஆம் தேதி அம்மாநிலத்தில் 6,996 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 12 ஆம் தேதி 7,823 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தச்சூழலில் நேற்று கேரளாவில் கரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று மட்டும் அம்மாநிலத்தில் 11,079 பேருக்கு கரோனா உறுதியானது.

இந்தநிலையில் இன்று கேரளாவில் மீண்டும் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அம்மாநிலத்தில் இன்று 9,246 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 96 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 10,952 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

state health department Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe