corona

Advertisment

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வந்தநிலையில் நேற்று 29,322 பேருக்கு கரோனா உறுதியானது.

இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 29,682 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் நேற்று 17.91% ஆகக்இருந்த கரோனா உறுதியாகும் சதவீதம், இன்று 17.54% ஆக குறைந்துள்ளது.