ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வருகிறது. நேற்று அம்மாநிலத்தில் 30,203 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
இந்தநிலையில் இன்றும் கேரளாவில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 32,803 கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 173 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே கேரளாவில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினால் மட்டுமே கேரளாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
Show comments