Advertisment

கேரளாவில் மீண்டும் உச்சம் தொடும் தினசரி கரோனா பாதிப்பு!

corona

Advertisment

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் கரோனாபரவல் அதிகமாகஇருந்துவருகிறது. மேலும், கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகும்40 ஆயிரம் பேருக்கு கரோனாபாதிப்பு ஏற்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் கேரளாவிற்குச் சென்ற மத்தியக் குழுவும், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் அதிகமான பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆராயப்பட்டுவருவதாகக் கூறியிருந்தது. இந்தநிலையில், நேற்று (25.08.2021) மட்டும் கேரளாவில்24,296 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியானது.

இந்தநிலையில், கேரளாவில் இன்று 31,445 பேருக்கு புதிதாக கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவில் ஓணம் போன்ற பண்டிகைகளை முன்னிட்டு அண்மையில் கரோனாகட்டுப்பாடுகளில்தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகளாலேயே தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Kerala corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe