Skip to main content

திங்கள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல் - கேரளா அரசு அறிவிப்பு!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

kerala

 

கேரளாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் பதிவானது.

 

இந்தநிலையில் கேரளாவில் இன்றும் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 31,265 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 153 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதனையடுத்து கேரளாவில் திங்கட்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் கேரளா அரசு அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்