Advertisment

முதல்வரின் பேட்டியை நிறுத்திய பேரன்... வைரலாகும் புகைப்படம்!

gh

Advertisment

இன்று மட்டும் கேரளாவில் 272 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 157 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 38 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும்கேரளா வந்தவர்கள். இன்று மேலும் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து, அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 28 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று மட்டும் 111 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 3,452 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,894 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பு தொடர்பான அறிவிப்புகளை மாநில முதல்வர் பினராயி விஜயன் தன் வீட்டில் இருந்து காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பகிர்வார். இன்று அவ்வாறு பேட்டியளித்துக்கொண்டிருக்கும்போது முதல்வரின் பேரன் அவரிடம் பேசுவதற்காக குறிக்கிட்டுள்ளான். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது குறித்து பினராயி கூறுகையில், வீட்டிலிருந்து பணியாற்றுபவர்களுக்கு இது போன்று இருக்கதானே செய்யும் என்றார்.

Kerala government
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe