Skip to main content

லேட்டஸ்ட் ஹைடெக் கஞ்சா கடத்தல்.. அதிர்ச்சியில் உறைந்து போன கேரள காவல்துறை! 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Kerala police froze in shock over latest hi-tech cannabis

 

கடத்தல் பஜாரில் இது புதுசு என்பதால் ஹைடெக் டெக்னிக்கல் முறையான கடத்தல் என்கிறார்கள் கேரள போலீசார். மேலும், இதனைக் கண்டு பிடிக்க மூளையைக் கசக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சரியமும் அதிசயமுமாய்.

 

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தின் புளியரை வனப்பகுதியை ஒட்டி கேரளாவின் நுழைவுவாயில் அமைந்துள்ளது. இரண்டு எல்லைப் புறங்களிலும் தமிழக கேரள அரசுகளின் தலா மூன்று சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த எல்லைப் புறங்களை அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு மாநில வாகனங்களும் கடந்து செல்கின்றன. குறிப்பாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்குத் தேவையான உள்ளங்கால் முதல் உச்சி வரையிலான பொருட்கள் வாகனங்களில் செல்கின்றன. இதில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்களும் கடத்தப்படுவதுண்டு. பலதுகள் தப்பித்தாலும் சிலதுகள் சிக்குவதுண்டு.

 

இந்த நிலையில், கேரளாவின் கொல்லம் ரூரல் எஸ்.பி.யான கே.பி.ரவிக்கு தமிழகம் வழியாக கேரளாவின் ஆரியங்காவுப் பாதையில் வருகிற கார் ஒன்றில் கஞ்சா கடத்தப்படுகிறது எனும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அலர்ட் ஆன எஸ்.பி. தனது க்ரைம் ஸ்குவார்டான டி.ஒய்.எஸ்.பி. அசோக்குமார், புனலூர் டி.ஒய்.எஸ்.பி. வினோத்குமார், தென்மலை எஸ்.ஐ.சாலு உள்ளிட்ட போலீஸ் டீமை அனுப்புகிறார்.

 

Kerala police froze in shock over latest hi-tech cannabis

 

இந்த டீம் தமிழக புளியரை எல்லையிலிருக்கும் கேரளாவின் ஆரியங்காவு கோட்டை வாசல் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை கண்காணிப்பிலிருந்திருக்கிறார்கள். மாலை சுமார் 6 மணிக்கு மேல் எல்லையைக் கடந்த ஆந்திரப் பதிவு எண் கொண்ட கார் ஒன்றை மடக்கிய டி.ஒய்.எஸ்.பி. அதிலிருந்த இருவரையும் விசாரித்திருக்கிறார். தங்களுக்குத் தமிழும் மலையாளமும் தெரியாது. தெலுங்கு மட்டுமே தெரியும் என்றும், சபரிமலை போவதாகவும் அவர்கள்  தெரிவித்திருக்கின்றனர்.

 

சபரிமலைக்குச் செல்வதாகத் தெரிவித்த அவர்கள், மாலை அணியாமல் சாதாரண உடையில் அவர்களிருந்ததால் சந்தேகப்பட்ட போலீசார் அந்தக் காரின் மூலை முடுக்கெல்லாம் இரண்டு மணிநேரம் ஸ்கேன் செய்தும் சந்தேகப்படும்படியான பொருட்கள் சிக்கவில்லை. சலித்துப்போன டி.ஒய்.எஸ்.பி. தற்செயலாகக் காரின் டோரைத் திறந்த போது அதன் உட்புறம் ஒன்றின் ஷீட் சமமாக இல்லாமல் மேடும் பள்ளமுமாய் இருப்பது தெரிய, சந்தேகப்பட்ட அவர் அந்த ஷீட்டை ஆயுதம் கொண்டு திறந்த போது டோரின் உள் அறைகளில் பெரிய பெரிய பொட்டலம் திணிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனைப் பிரித்துப் பார்த்தபோது, அத்தனையும் அசல் கஞ்சா என்று தெரிந்ததும் அதிர்ந்து விட்டனர். இது போன்று காரின் நான்கு டோர்களிலும் மறைத்து வைக்கப்பட்ட 30 பாக்கெட்களில் சுமார் 65 கிலோ கஞ்சா சிக்கியிருக்கிறது.

 

Kerala police froze in shock over latest hi-tech cannabis

 

விசாரணையில் அவர்கள் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த செம்பெட்டி பிரம்மையா, சொலசானி ஹரிபாபு என்று தெரிய வந்திருக்கிறது. தெலங்கானாவிலிருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா, கொல்லம் திருவனந்தபுரம் ஏஜெண்ட்களுக்கு சப்ளை செய்யக்கொண்டு செல்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

 

தெலங்கானாவின் மாவோயிஸ்ட்கள் மறைந்து வாழும் பகுதியில் விளைகிற முதல் தர கஞ்சா இது. இங்குள்ள மார்க்கெட்டின் படி இதன் ஹோல்சேல் விலை ஒரு கோடி. ரீட்டெய்லில் விலை டபுள். மொத்தக் கஞ்சாவையும் காரையும் கைப்பற்றினாலும் பிடிபட்டவர்கள் கூலிக்கு கடத்துபவர்கள். இதன் டோட்டல் ப்ளானையும் அறிய மேல் விசாரணைக்காகத் தென்மலைக் காவல் நிலையம் கொண்டு போவதாகத் தெரிவித்த க்ரைம் பிரான்ஞ் டி.ஒய்.எஸ்.பி.யான அசோக்குமார், கடத்தல் வகையில் புது டெக்னிக் அதனால்தான் ஆந்திரா, தமிழகம் தப்பி எங்களிடம் சிக்கியுள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.