Skip to main content

குடும்ப விழா என்ற பெயரில் ஜோடியை மாற்ற வாட்ஸ்அப் குரூப்... முக்கிய நபர்களுக்கு தொடர்பு..? - வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

hjk


கேரள மாநில கோட்டயம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக்கொண்டு பணம் வாங்கி வரச் செய்துள்ளார். அவரும் அவ்வாறே செய்து வர ஒரு கட்டத்தில் அவர், கணவரின் விருப்பத்துக்கு மறுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்கள் முன்பு வேறு ஒருவரின் வீட்டிற்கு மனைவியை அழைத்து சென்ற அந்த இளைஞர், அங்கிருந்தவரிடம் பணம் வாங்கிக்கொண்டு மனைவியை விட்டுவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் கோபமான அவரது மனைவி நேராக அங்கிருந்து வெளியேறி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை அடுத்து அவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றது தெரியவந்துள்ளது. 

 

போலீசார் விசாரணையில் அந்த இளைஞர் கூறியதாவது, " நாங்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குடும்ப விழா என்ற பெயரில் குரூப் தொடங்கி செயல்பட்டு வருகிறோம். இந்த குரூப்பில் தற்போது வரை 2000 ஆயிரம் நபர்கள் இருக்கிறோம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்தக் குரூப்பில் உள்ள நண்பர்கள் வீட்டிற்குச் சென்று குடும்ப விழா என்ற பெயரில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வோம். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பல நண்பர்களுக்கு அழைப்பு விடுப்போம். அவர்களும் நிறைய எண்ணிக்கையில் கலந்துகொள்வார்கள். அந்த விழாவில் மது, பிரியாணி என்று எங்கள் குரூப்பின் மூலம் செலவு செய்வோம்.  நாங்கள் கூட்டிச்செல்லும் எங்களது மனைவிகளை அங்கு வருபவர்களுடன் அனுப்பி பணம் பெற்றுக்கொள்வோம். இதன் மூலம் எங்களுக்கு வாரத்தில் பல ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும். ஹோட்டல்களில் நடைபெற்றால் போலீஸ் சொந்தரவு இருக்கும் என்பதால் எங்கள் குரூப்பில் உள்ளவர்களின் வீடுகளையே நாங்கள் தொடர்ந்து தேர்ந்தெடுப்போம்" என்றார்.

 

இந்த தகவலை கேட்ட அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரின் செல்போனை சோதனையிட்டதில் அவர் கூறிய அனைத்தும் உண்மை என்பதை உறுதி செய்தனர். ஜோடியை மாற்றிக்கொள்ளும் அந்த வாட்ஸ் குரூப்பில் 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்களது மனைவியை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளனர். இந்தக் குரூப்பில் அரசு உயரதிகாரிகள், அரசியல் பிரபலங்களின் எண்கள் இருப்பதாக தாங்கள் சந்தேகம் அடைந்துள்ளோம். எனவே அது குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகிறோம். தற்போது புகாருக்குள்ளான 7 பேரை கைது செய்துள்ளோம் எனக் கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில எதிர்க்கட்சியினர் குரலெழுப்பியுள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.