Skip to main content

குடும்ப விழா என்ற பெயரில் ஜோடியை மாற்ற வாட்ஸ்அப் குரூப்... முக்கிய நபர்களுக்கு தொடர்பு..? - வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

hjk


கேரள மாநில கோட்டயம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக்கொண்டு பணம் வாங்கி வரச் செய்துள்ளார். அவரும் அவ்வாறே செய்து வர ஒரு கட்டத்தில் அவர், கணவரின் விருப்பத்துக்கு மறுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்கள் முன்பு வேறு ஒருவரின் வீட்டிற்கு மனைவியை அழைத்து சென்ற அந்த இளைஞர், அங்கிருந்தவரிடம் பணம் வாங்கிக்கொண்டு மனைவியை விட்டுவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் கோபமான அவரது மனைவி நேராக அங்கிருந்து வெளியேறி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை அடுத்து அவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றது தெரியவந்துள்ளது. 

 

போலீசார் விசாரணையில் அந்த இளைஞர் கூறியதாவது, " நாங்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குடும்ப விழா என்ற பெயரில் குரூப் தொடங்கி செயல்பட்டு வருகிறோம். இந்த குரூப்பில் தற்போது வரை 2000 ஆயிரம் நபர்கள் இருக்கிறோம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்தக் குரூப்பில் உள்ள நண்பர்கள் வீட்டிற்குச் சென்று குடும்ப விழா என்ற பெயரில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வோம். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பல நண்பர்களுக்கு அழைப்பு விடுப்போம். அவர்களும் நிறைய எண்ணிக்கையில் கலந்துகொள்வார்கள். அந்த விழாவில் மது, பிரியாணி என்று எங்கள் குரூப்பின் மூலம் செலவு செய்வோம்.  நாங்கள் கூட்டிச்செல்லும் எங்களது மனைவிகளை அங்கு வருபவர்களுடன் அனுப்பி பணம் பெற்றுக்கொள்வோம். இதன் மூலம் எங்களுக்கு வாரத்தில் பல ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும். ஹோட்டல்களில் நடைபெற்றால் போலீஸ் சொந்தரவு இருக்கும் என்பதால் எங்கள் குரூப்பில் உள்ளவர்களின் வீடுகளையே நாங்கள் தொடர்ந்து தேர்ந்தெடுப்போம்" என்றார்.

 

இந்த தகவலை கேட்ட அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரின் செல்போனை சோதனையிட்டதில் அவர் கூறிய அனைத்தும் உண்மை என்பதை உறுதி செய்தனர். ஜோடியை மாற்றிக்கொள்ளும் அந்த வாட்ஸ் குரூப்பில் 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்களது மனைவியை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளனர். இந்தக் குரூப்பில் அரசு உயரதிகாரிகள், அரசியல் பிரபலங்களின் எண்கள் இருப்பதாக தாங்கள் சந்தேகம் அடைந்துள்ளோம். எனவே அது குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகிறோம். தற்போது புகாருக்குள்ளான 7 பேரை கைது செய்துள்ளோம் எனக் கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில எதிர்க்கட்சியினர் குரலெழுப்பியுள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.