Advertisment

முதன் முறையாக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியார்!!!

kerala nun case

கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமைகள் செய்ததாக சொல்லப்பட்ட பாதிரியார் பிராங்கோ இன்று காலை போலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். முதன் முறையாக இந்திய நாட்டிலேயே பாதிரியார் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவது இதுதான்.

Advertisment

கேரள கன்னியாஸ்திரிகள் 13 பேரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக கூறப்படும் பாதிரியார் பிராங்கோ முலக்கல், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொச்சி காவல்துறையினரிடம் ஆஜராகினார். இந்த விசாரணையை கேரள காவல்துறையின் க்ரைம் பிரிவு வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் தலைமையிலான ஐந்துபேர் கொண்ட குழு நடத்தி வருகிறது. பிராங்கோ காவல்துறையினரிடம் ஆஜராகினால், கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் நேற்று கேரள உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை வருகின்ற 25ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்க எடுத்துக்கொள்வதாக இருந்தது.

Advertisment

நேற்று முந்தினம் பாதிரியார் பிராங்கோவுடன் காவல் துறை விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் வாடிக்கனிலிருந்து பாதிரியார் பிராங்கோ வகித்த பதவியிலிருந்து விடிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக போலிஸார் விசாரணையை தொடர்ந்து நடத்தினர்.

இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று பாதிரியார் பிராங்கோவை கைது செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து,மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

kerala nun case
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe